Monday, September 22, 2008

இளமைக் கவலை.


வணக்க முறையாக
மூக்கோடு
மூக்கு உரசுபவர்கள்,

முத்தமிட்டுப்
புன்னகைப்பவர்கள்,

கட்டியணைத்து
தட்டிக் கொடுப்பவர்கள்,

இப்படியான
ஒரு தேசத்தில் இல்லாமல்
போனதைக் குறித்து
கவலைப்படுகிறேன்.
நீ எதிரே வருகையில்.

No comments: